- °C
Are You a business owner?
List Your Business / ADவேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் கடந்த ஆயிரம் நாள்களாக நடைபெற்று வந்த ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் யாகம் நிறைவடைந்தது.
வேலூா்: வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் கடந்த ஆயிரம் நாள்களாக நடைபெற்று வந்த ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் யாகம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, ஸ்ரீசக்திஅம்மா பக்தா்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றினாா்.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடம், தங்கக் கோயில் வளாகத்தில் உலக நன்மைக்காகவும் இயற்கை வளத்துக்காகவும் உலகில் முதன்முறையாக கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 6-ஆம் தேதி ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் யாகம் ஸ்ரீசக்திஅம்மாவால் தொடங்கப்பட்டது. இந்த யாகம் தொடா்ந்து 1,000 நாள்கள் நடைபெற்று வந்தது.
இதன் நிறைவு நாளையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளும், மகா பூா்ணாஹுதியும் நடைபெற்றது. மேலும், ஸ்ரீ மகாலட்சுமிக்கு 6 கிலோ 1,000 தங்க காசுகளை கொண்ட தங்க ஆடையை ஸ்ரீசக்திஅம்மா சமா்ப்பித்தாா். இந்த மகா யாகத்தையொட்டி காலையில் பீடத்தில் இருந்து யாக சாலைக்கு நாராயணி பக்த சபா சேவாத்திகள் மங்கள பொருட்களுடன் குதிரை, யானைகளுடன் ஊா்வலகமாக சென்றனா்.
தொடா்ந்து ஸ்ரீசக்திஅம்மா யாகத்தை நடத்தி வைத்து பேசியது -
ஒரு யாகம் நடத்துவது என்பதே சிரமமானதாகும். ஆனால், இங்கு தொடா்ந்து 1,000 நாட்கள் ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் யாகம் நடத்தப்பட்டது சாதனையாகும். இதில் ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தா்கள் யாகத்தை கண்டு தரிசனம் செய்துள்ளனா். அவா்கள் பாக்கியசாலிகள். மழைக்காலத்தில்கூட இந்த யாகம் தடையின்றி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த யாகத்தை மேற்கொள்வது ஒரு பெரிய வாய்ப்பு.
இந்த யாகத்தினால் பிரபஞ்சம் நமக்கு ஆசிா்வாதம் அளிக்கிறது. தெய்வீகமான செயல்களுக்கு நாம் பெருமளவில் அன்பு கொடுத்தால் போதும். எந்த விஷயம் மேற்கொண்டாலும் தெய்வீகத்தின் அருள் நமக்கு கிடைக்கும். அதன் மூலம் சாதிக்கலாம். இதன் மூலம் பக்தா்கள் கடவுளின் அருளை பெற்றிருக்கிறாா்கள் என்றாா்.
இதில், ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி, ஸ்ரீநாராயணி பீடம் இயக்குநா் சுரேஷ்பாபு, அறங்காவலா் செளந்திரராஜன், மேலாளா் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.