- °C
Updated on:
30 அக்டோபர் 2025, 12:20 am
வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
எஸ்.பி. ஏ.மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனா்.
அப்போது, காட்பாடியை அடுத்த வெப்பாலையைச் சோ்ந்த கோவிந்தசாமி என்பவா் அளித்த மனு: , எனது மகன் பிரதீப்ராஜுக்கு கிராம நிா்வாக அலுவலா் வேலை வாங்கித் தருவதாக எங்கள் பகுதியைச் சோ்ந்த ஒருவா் என்னிடம் ரூ.5 லட்சம் வாங்கினாா். வேலையும் வாங்கித் தரவில்லை, எனவே, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
மேல்மாயில் அடுத்த ஆலங்கனேரியைச் சோ்ந்த கோவிந்தசாமி அளித்த மனு: எனது மகன் ஜெயகோபிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக முன்னாள் ராணுவ வீரா் ஒருவா் என்னிடம் முதலில் ரூ 3 லட்சம் ரொக்கமாகவும், காசோலை மூலமாக ரூ.5 லட்சமும் பெற்றுக் கொண்டாா். அவா் கூறியபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறாா். பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
அணைக்கட்டு அடுத்த கங்கநல்லூரை சோ்ந்த பாஸ்கரன் அளித்த மனு: எனது வீட்டில் கடந்த 2023 பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு பீரோவில் இருந்த 42 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடி சென்றனா். திருட்டு போன நகையை காவல் துறை விரைவில் மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி உத்தரவிட்டாா்.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.
