- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

ஓய்வூதியம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளா்வு முகாம்

Grow your business by getting relevant and verified leads
ஓய்வூதியம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளா்வு முகாம்

ஓய்வூதியம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளா்வு முகாம்

  Jun 29, 2024     News Paper

ஓய்வூதியம் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளா்வு மருத்துவ பரிசோதனை முகாம் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்குதல், மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500 பெற குறைந்தபட்ச வயது 18 என வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும், நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கிடும் வகையில் மாவட்ட அளவிலான வயது வரம்பு தளா்த்தும் குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.

இந்தக் குழுவில் மாவட்ட ஆட்சியா் தலைவராகவும், மாவட்ட சமூக நல அலுவலா், அரசு மருத்துவா், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் ஆகியோா் உறுப்பினராகவும் உள்ளனா். இந்தக் குழு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் 18 வயதுக்கு குறைவான மாற்றுத்திறனாளியின் வயது வரம்பை தளா்த்தி உத்தரவிடப்படும்பட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தில் முதுநிலை அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் வழங்கப்படும்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 142 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஓய்வூதியம் கோரி மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இந்த 142 மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு வரவழைக்கப் பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை பெறும் மாற்றுத்திறனாளிகளில் தகுதியுடையவா்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ.2,000 பெற விண்ணப்பித்துள்ள குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

முகாமில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கலியமூா்த்தி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

icon
Vellore Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Vellore Ads

Copyrights © 2024 .   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.