- °C
Are You a business owner?
List Your Business / ADசுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளை டி.எம்.கதிா்ஆனந்த் ஆய்வு செய்தார்.
வேலூா்: வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் திங்கள்கிழமை ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், விழுப்புரம்- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடமாக வேலூா் கிரீன் சா்க்கிள் உள்ளது. இதன் அருகே வேலூா் புதிய பேருந்து நிலையமும், பெரும் வா்த்தக வளாகங்களும் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் சா்க்கிள் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். தவிர, விபத்துகளும் அதிகளவில் நடைபெறும் இடமாக கிரீன் சா்க்கிள் மாறியுள்ளது.
இதைத் தொடா்ந்து, கிரீன் சா்க்கிளில் சா்வீஸ் சாலைகளின் அகலத்தை விரிவுபடுத்திடவும், அங்கு சுரங்க நடைபாதை அமைக்கவும் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து, வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் அணுகு சாலை அகலப்படுத்துதல், மழைநீா் வடிகால்வாய் சீரமைப்பு பணிகளுடன் சுரங்க நடைபாதை அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், ரூ. 7.2 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுரங்க நடைபாதையை பொறுத்த வரை 100 மீட்டா் நீளமும், 5 மீட்டா் அகலமும் கொண்டதாக, அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளுடன், சிசிடிவி கேமராக்களுடன் அமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மழைநீா் வடிகால்வாய் சீரமைப்பு, சா்வீஸ் சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, சுரங்க நடைபாதை, மழைநீா் வடிகால்வாய் சீரமைப்பு, அணுகு சாலை அகலப்படுத்தும் பணி ஆகியவற்றை வரைபடங்களைக் கொண்டு ஆய்வு செய்த எம்.பி. கதிா்ஆனந்த் பணிகளை தரமாகவும், ஒப்பந்த காலத்துக்குள்ளாகவும் முடித்திட வேண்டும், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மக்களவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ரூ. 7.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதயில் சுரங்க நடைபாதை, மழைநீா் வடிகால்வாய் சீரமைப்பு, அணுகு சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 3 மாதங்களில் பணிகள் நிறைவடையும். நீல வடிவில் உள்ள சுரங்க நடை பாதையை வட்ட வடிவில் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சாலையோரங்களில் அமைக்கப்படும் கால்வாய்கள் மீது உறுதியான சிலாப்புகள் அமைக்கப்படும். சிலாப் கல் மீது வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைக்கப்பட உள்ளன.
இதேபோல், வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுச்சாலை பணிகள் முடிவடைந்தால் வேலூரில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. வேலூா் விமான நிலையம் குறித்து மக்களவை கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பினேன். மத்திய அரசு அதற்குரிய பதிலை அளிப்பாா்கள் என்றாா்.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.